Sunday, July 20, 2014

சதுரங்க வேட்டை



“Money is always Ultimate”

“குற்றவுணர்ச்சி இல்லாம செய்யுற எதுவுமே தப்பில்ல”

“ஒருத்தன் உன்ன ஏமாத்தீட்டான்னா அவன எதிரியா நினைக்காத. ஒரு வகைல அவன் உனக்கு குரு. எப்படி ஏமாத்தறதுனு உனக்கு சொல்லிக்குட்க்குறான்”

“ஒருத்தன ஏமாத்தனும்னு முடிவு பண்ணீட்டா, அவன்கிட்ட இருந்து கருணைய எதிர்ப்பாக்காத, அவன் ஆசைய தூண்டு”

”ஒரு பொய் சொன்னா அதுல உண்மையும் கலந்துருக்கனும். அப்போதான் அது பொய்னு தெரியாது”

”அந்த பொண்ணுக்கு ரொம்ப கருணை காட்டுற’. ’அந்த கருணைய எப்படி காசாக்குறதுனு யோசி”

”தமிழ்நாட்ட சிங்கப்பூர் மாதிரி மாத்தி காட்டுறோம்னு சொல்லி ஓட்டு கேக்குறாங்க. பத்து வருஷத்துக்கு அப்புறமும் தமிழ் நாடு அப்படியே தான் இருக்குது. அப்போ அவங்க நம்மள ஏமாத்தீட்டாங்கன்னு தான அர்த்தம். இதுக்காக அவங்க மேல Case போட முடியுமா”

”நான் யாரையும் ஏமாத்துல. ஏமாற தயாரா இருந்தவங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தேன்”

“நாளைக்கு சம்பாதிக்க முடியுமானு தெரியாதவந்தான் சார் பணத்த சேத்து வெப்பான். எனக்கு அந்த பயம் இல்ல”

“நிதி இருந்தா போதும். நீதிய ஈசியா வாங்கீடலாம்”

“என்ன உங்களால ஒன்னும் பண்ண முடியாது சார். ஏன்னா நான் ஏழையும் இல்ல, கோழையும் இல்ல”

”இருக்குறத இல்லாததா காட்டனும், இல்லாதத இருக்குறதா காட்டனும் புரிஞ்சதா’.  ‘இல்ல’. ‘ குட். உனக்கு புரிஞ்சுட்டா நான் வேற Plan போடனும்”

“இந்த உலகத்துலயே ரொம்ப ஈசியான வேல பணம் சம்பாதிக்குறதுதான்”


படத்தில் எனக்கு மிக பிடித்தது இத்தகைய வசனங்கள் தான். படம் முழுக்க இன்னும் எத்தனையோ நல்ல வசனங்கள் போகிற போக்கில் நம்மை அசைத்துச் செல்கிறது.

                                                       

அடுத்ததாக என்னை மிகவும் கவர்ந்தது கதாபாத்திரங்கள். ஏமாற்றுக்காரணான கதாநாயகனின் பெயர். அவர் கதாப்பாத்திரத்தை வடிவமைத்திருக்கும் விதம் அத்தனை அருமை. கூடவே எப்பொழுதும் சுத்த தமிழில் பேசித்திரியும் தாதா, கதாநாயகனின் குருவாக வரும் கதாப்பாத்திரம், நாயகனை எப்பொழுதும் சந்தேகிக்கும் அடியாள், செட்டியார், ஈமூ கோழிப்பண்ணை முதலாளி, Real Estate வியாபாரி, தொலிழதிபர் என யதார்த்ததிற்கு நெருக்கமாக பிணைக்கப்பட்டிருக்கும் கதாப்பாத்திரங்களும் அவர்கள் நடித்திருக்கும் விதமும் அட்டகாசம்.

குறிப்பாக நாயகன் நட்ராஜ். ஏமாற்றுப் பேர்வழியாக இவரின் உடல் மொழியும், முகபாவனைகளும் அட்சர சுத்தம். ஆசையைத் தூண்டும் பேச்சால் மக்களை ஏமாற்றும் இடத்திலும், உண்மை தெரிந்துகொள்ள போலிப்பாசம் காட்டும் போலிஸ் கான்ஸ்டெபுளைக் கலாய்க்கும் இடத்திலும் வெகு இயல்பாக ரசிக்கவைக்கிறார். வெள்ளை வேட்டிச் சட்டையில் தெனாவட்டாக கோர்ட்டிலிருந்து வெளியே வரும் அந்த காட்சியில் பிரமாதப்படுத்தியிருக்கிறார்.

அத்தியாயம் அத்தியாயமாக போய்க்கொண்டிருக்கும் படத்தை இறுதிவரை அப்படியே கொண்டுபோயிருந்தால் படம் இன்னும் பட்டாசாயிருந்துருக்கும். நம்மை ஏதோ ஒரு இடத்திலேனும் படத்தோட சம்மந்தப்படுத்திக்கொள்ளுமாறு சம்பவங்களையும் காட்சிகளையும்  அமைத்திருப்பது திரைக்கதையின் சிறப்பு. சமகாலத்தில் தமிழில் நடந்துகொண்டிருக்கும் புதிய முயற்சிகளில் ஓர் குறிப்பிடத்தக்க படமென இதைச் சொல்லலாம். இசை, எடிட்டிங், போட்டோகிராபி பற்றியெல்லாம் பேச அதில் அ’னா ஆ’வன்னா கூடத் தெரியாது. இயக்குனர் வினோத்திற்கும், நாயகன் நட்ராஜுக்கும், தயாரிப்பாளர் மனோபாலாவிற்க்கும் ஒரு நல்ல சினிமாவைக் கொடுத்ததற்காக வாழ்த்துக்களும், நன்றியும்.



4 comments:

  1. வித்தியாசமானக் கதைன்னு தெரியுது, எனக்குப் பிடிக்குமான்னு தெரியலை :-) nice review!

    amas32

    ReplyDelete